Thursday, September 27, 2012

சுவையான கால்பந்து விளையாட்டு தகவல்கள்

·         1950ம் ஆண்டு உலக கால்பந்து விளையாட்டுப்போட்டியில் இந்தியர்கள் ஃபூட்ஸ் இல்லாமல் வெறும் காலுடன் விளையாடியதால் உலக கால்பந்து சம்மேளத்தினால் போட்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

·         1975ம் ஆண்டு சிலி மற்றும் உருகுவேக்கு இடையிலேயான போட்டியின் போது 19 வீரர்கள் ஃபவுல் முறையில் வெளியேறியதால் ஆட்டம் கைவிடப்பட்ட்து.

·         சர்வதேச கால்பந்து வீரர் ஒருவர் ஒரு போட்டியின் போது சுமாராக 6மைல்கள் தொலைவு ஓடுகிறார்.

·         பிரான்சு நாட்டின் நட்சத்திர வீரர் ஜிடேன் தன் வாழ்நாள் முழுவதும் ஆஃப் சைடு எனும் ஃபவுல் முறையை செய்தது இல்லை.

·         கால்பந்தாட்ட கோல் கீப்பர்கள் 1913ம் ஆண்டு வரை மற்ற வீரர்கள் அணியும் அதே நிறத்திலான உடைகளையே அணிந்தனர்.

·         1930 மற்றும் 1950ஆம் ஆண்டை தவிர மற்ற அனைத்துப்போட்டிகளிலும் ஐரோப்பிய அணிகள் இறுதிப்போட்டிகளில் பங்கேற்று உள்ளன.

·         முதன்முறையாக தொழில்முறையாக கால்பந்து விளையாடிய கருப்பின கால்பந்தாட்ட வீரர் ஆர்தர் வார்டன்.   
      
·         உலகக்கோப்பை கால்பந்துப்போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது 1 பில்லியன் மக்களால் பார்க்கப்படுகிறது.    
         
·         அதிக முறை உலகக்கோப்பை வென்ற அணி பிரேசில் 5 முறை.

·         உலகக்கோப்பை போட்டிகளின் போது முதல் முறையாக சிலி நாட்டின் கார்லோஸ் காசிஸ்லி என்வருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்ட்து.

·         உலக்க்கோப்பை போட்டிகளில் 210 கோல்களை அடித்து பிரேசில் அணி முன்னிலை வகிக்கிறது.

·         பிரேசிலின் நட்சத்திர வீரர் பிலே உலக கோப்பை வென்றதற்க்காக 3 தங்கப்பதக்கங்களை முறையே 1958,1962 மற்றும் 1970ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.

·         உலகக்கோப்பை போட்டிகளில் 99 ஆட்டங்களில் பங்கேற்று ஜெர்மனி அணி முன்னிலை வகிக்கிறது.

·         மடகாஸ்கர் அணி அடோமா அணிக்கு எதிராக விளையாடிய போது 149 சொந்த கோல்களை போட்டது முந்தைய போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்பினால் கோபம் கொண்ட அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க சொந்த கோல் கம்பங்களில் கோல்களை அடித்தனர்.

·         உலகக்கோப்பை போட்டிகளில் குறைவான ரசிகர்கள் கலந்து கொண்ட போட்டி 1930ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் நடைபெற்றது அதில் வெறும் 300 பார்வையாளர்களே கலந்து கொண்டனர்.

·         1900ம் வருடம் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து விளையாட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி முதல் தங்கப்பதக்கத்தை பெற்றது.



Thursday, September 20, 2012

கூடைப்பந்து விளையாட்டு உருவான கதை



எல்லா விளையாட்டுகளும் ஏதாவது பழங்கால விளையாட்டிலிருந்தோ அல்லது மற்ற விளையாட்டுகளை சார்ந்தோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஆனால் கூடைபந்து விளையாட்டு இதற்கு விதிவிலக்கு எந்த விளையாட்டையும் பிரதிபலிக்காமல் தனிப்பட்ட முறையில் ஜேம்ஸ் நைஸ்மித் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நைஸ்மித் 1861-ம் ஆண்டு கனடாவில் அல்மாண்டி என்னும் ஊரில் பிறந்தார். மெக்கில் பல்கலைகழகத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக பட்டம் பெற்று 1891-ம் ஆண்டு அமெரிக்காவின் YMCAசர்வதேச பயிற்சி பள்ளியில்(இன்று ஸ்பிரிங்ஃபில்டு கல்லூரி) பணிக்கு சேர்ந்தார். பணியில் சிறப்பாக இருந்தார் நைஸ்மித். புதுவகையான பயிற்சிகளையும் ஆட்டங்களை உண்டாக்குவதில் தனித்திறமை பெற்று வழங்கினார்.

அமெரிக்காவின் கடும் பனிகாலங்களில் மாணவர்கள் வெளிப்புற ஆட்டங்களான கால்பந்து,வேகப்பந்து போன்ற ஆட்டங்களை தவிர்த்தனர். இதனால் மாணவர்களிடையே உடல்தகுதி நிலை குறைந்து அவர்கள் உடல்நிலையில் மாற்றம் உண்டானது.இந்நிலையை தவிர்க்க எண்ணினார் நைஸ்மித் 2வாரங்கள் விடாமல் யோசனை செய்து சில விதிமுறைகளோடு உள்ளரங்கு விளையாட்டு ஒன்றை கண்டுபிடித்தார். மேலும் அவ்விளையாட்டு கால்பந்து விளையாட்டை போல வேகமும்,நுட்பமும் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார்.

நைஸ்மித் தனது சிறுவயது விளையாட்டான மலைமேல் வாத்துஎன்ற விளையாட்டை அடிப்படையாக வைத்து(மலைமேல் ஏறும் வாத்தை குறிவைத்து கல்லால் தாக்குவது) தனது புது விளையாட்டை கண்டுபிடித்தார்.உயரமான இடத்தில் ஒரு கூடையை கட்டி குறிவைத்து பந்தை உள்ளே போட்டால் புள்ளிகள் வழங்கப்படும். இப்போது இருக்கும் ஆடுகளத்தின் அளவில் பாதியளவே அப்போது அவர் உண்டாக்கிய ஆடுகளம் இருந்த்து இருபுறமும் 10அடி உயரம் கொண்ட கம்புகளில் பழக்கூடைகள் கட்டப்பட்டன அதில் விளையாட அவர் கால்பந்தை தேர்ந்தெடுத்தார் ஆட்டத்திற்க்கு 13 விதிகளை அவர் வகுத்தார். விளையாட ஆரம்பித்ததும் அவருக்கு சிக்கல் உண்டானது கூடைகள் அடியில் மூடப்பட்டு இருந்ததால் ஒவ்வொருமுறையும் பந்தை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர்.
ஒவ்வொரு முறையும் நீண்ட குச்சி வைத்து எடுக்க சிரமமாக இருந்ததால் கூடைகளின் அடிப்புறத்தை வெட்டி விட்டார்.

காலப்போக்கில் இவ்விளையாட்டு விதிகளில் பலமாற்றங்கள் செய்யப்பட்டு இன்று உலகின் முன்னணி விளையாட்டுகளில் ஒன்றாக திகழ்கின்றது.அமெரிக்க நாடுகளில் தொழில் முறை கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்  கோடிகளில் புரளுகின்றனர்.

இந்த விளையாட்டு உலக அளவில் இவ்வளவு புகழ்பெறும் என்பதை இதை கண்டுபிடித்த ஜேம்ஸ்மித்திடம் முன்னரே சொல்லியிருந்தால் அவர் கட்டாயமாக நம்பியிருக்க மாட்டார். இவ்விளையாட்டை இவ்வளவு பிரபலமாக்கியதில் அமெரிக்க YMCA பள்ளியின் பங்கு மிகவும் மகத்தானது.1936-ம் ஆண்டு முதல் கூடைபந்தாட்டம் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.