Thursday, February 9, 2012

தாய் மனம்


வேலை நிமித்தமாக நானும் நண்பனும் மஹாபலிபுரம் வரை சென்றிருந்தோம்.வேலை முடிய இரவு 9மணி ஆகிவிட்டது பேருந்தில் சென்றதால் திரும்பவும் பேருந்துக்காக காத்திருக்கவேண்டி இருந்தது. மற்ற வழி தடங்களுக்கான பேருந்துகள் வந்து கொண்டும் போய்கொண்டும் இருந்தன எங்கள் தட பேருந்து அதிக நேரம் காக்க வைத்து பின்னர் கடைசியாக வந்து சேர்ந்தது. கடைசி சீட்டில் இடம் பிடித்து நானும் நண்பனும் அருகருகே உட்கார்ந்து கொண்டோம்.பக்கத்தில் மூன்று பெண்களும் முன் சீட்டில் இரண்டு பெண்களும் உட்கார்ந்து கொண்டனர்.அனைவருக்கும் 35ந்திலிருந்து 40வயது இருக்கும்.ஜன்னல் ஓரமாய் உட்கார்ந்த பெண்ணை வழி அனுப்ப ஒருவன் வந்து இருந்தான்.அவன் வார்த்தைக்கு வார்த்தை அந்த பெண்ணிடம் என்ன மறந்துடாத என் நம்பற ஞாபகம் வச்சிக்க என்று சொல்லி ரூபாய் தாள்களையும் வழங்கிகொண்டிருந்தான்.வண்டி கிளம்பியது மற்ற பெண்கள் கொள் என்று சிரித்தனர்.

ஒருவள் என்னடி சரியான சொக்குப்பொடி போட்டுட்ட போல?!

இல்லக்கா இன்னைக்கு கம்பெனி கொஞ்சம் அதிகமா கொடுத்திட்டேன் போல பையன் கிறங்கிட்டான்.

எங்களுக்கு ஒருவழியாக புரிந்தது யாருக்கு நடுவில் உட்கார்ந்து இருக்கிறோம் என்று!

மற்ற ஒரு பெண் மனுசனுங்களாடி இவனுங்க என்னதான் காச கொடுத்திட்டாலும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாதவனுங்க அஞ்ஜி பேரா வரானுங்க கால தூக்க கூட முடியல நாளைக்கு எப்படித்தான் நடக்கப்போறேனோ?!!

அந்த காஞ்சிபுரத்து காரிய பார்த்தியாக்கா நம்ப கஸ்டமர வளச்சி போடுறதே அவளுக்கு வேலயாப்போச்சி

பாவம் கஷ்ட படுறான்னு பாத்தா நம்மளுக்கே அவ வேல காட்டுறுவா போல
நாளைக்கு அவ நம்ம பக்கம் வந்தா நானே அவள ஓட ஒட அடிப்பேன்கா.

ஒன்று தெரிந்த்து இவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து கூட்டாக வந்து தொழில் செய்கின்றனர் என்று,முன்னாடி போய் உட்காரலாம்னு பார்த்தா அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஆனாலும் மனதில் ஒரு சபலம் என்னதான் பேசுறங்கன்னு கேட்போமே போகிறவரை டைம் பாஸ் ஆகுமே.......

தல சரியான சீட்ல உட்கார்ந்துட்டோம் நமக்கு சரியான லக்கி பிரைஸ் இதுல எதாவது ஒன்ன தட்டி என்ஜாய் பண்ண வேண்டியதுதான் என்ன சொல்ற?

அடங்குடா ஒழுங்கா இருக்கிறவனே ஆயிரம் கஷ்டத்துல போய் மாட்டிக்குறான் இது நமக்கு தேவயில்லாத ஒண்ணு பார்த்தியா சந்தோசபடு ஜாலியா நாலு வார்த்தை பேசு அத வுட்டுட்டு பிக்கப்பு டிராப்புன்னு தேவையில்லாம பேசாதே.

என்ன தம்பி எங்க போய்ட்டு வரீங்க?

வேல விஷயமா வந்தோம் முடிச்சிட்டு வீட்டூக்கு போய்ட்டு இருக்கோம்.

நண்பன் உடனே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

அப்படியாப்பா ரொம்ப தேங்ஸ் பா! அழகு என்னப்பா அழகு ஒரு நாள் எல்லோரும் இழக்க வேண்டிய ஒண்ணு தானே. சரி என்ன இப்படி ரசிக்கிறியே என் வயசென்னன்னு உன்னால சொல்ல முடியுமா?

ஒரு 35ந்து இல்லனா 38 வயது சரியா?
எப்படிப்பா இப்படி சரியா சொல்லுற. எனக்கு 52 முடிந்து 53 தொடங்க போகுது எங்களோட முலதனமே உடம்புதான் இது சரியில்லனா ஒரு பய சீந்த மாட்டான்.
உனக்கென்னப்பா வயசாகுது?

எனக்கு 27 அவனுக்கு 26 ஆகுது.

அட என் புள்ள வயசுதான் உங்களுக்கு.இங்க வர பெண்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கு சினிமா ஆசையால வந்தவங்க பணத்துக்காக வந்தவங்கன்னு நிறைய கதை இருக்கு.இதோ என் கூட வர்ராளுங்களே இவங்களுக்கல்லாம் நான் தான் தலைவி போல எதாவது பிரச்சன, கஷ்டம்னா என் கிட்டதான் வந்து சொல்லுவாளுங்க என்னால முடிஞ்ச வரைக்கும் தீர்த்து வைக்கிறேன்.

தப்பா நினைக்காதிங்க நீங்க எப்படி வந்தீங்க?

ஒரு காலத்துல நான் இந்த தொழில்ல கொடிகட்டி பறந்தேன்.கையில பணம் புறண்டதுன்னு சொல்லுவாங்க ஆனா என் கிட்ட பொங்கியதுன்னு சொல்லலாம்.எங்கள கூட்டி கொடுக்கும் ஒருவனே எனக்கு தூண்டில் போட்டான் அந்த அறியாத வயதில் அவன் பேச்சுக்கு மயங்கினேன்.பகலில் மற்றவர்களுக்கும் இரவில் அவனுக்கும் மனைவியாக இருந்தேன்.குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்த்தும் சொந்தமாக மளிகை கடை தொடங்கலாம் என்று ஆசை வார்த்தைகளை காட்டினான்.அவன் பேச்சுக்கு மகுடிக்கு மயங்கும் பாம்பை போல மயங்கினேன்.ஒரு நாள் லெட்டர் ஓண்ணு எழுதி வைத்திட்டு ஓடிட்டான். அதுல என்ன வழக்கம் போல கதைதான் எனக்கு குடும்பம் இருக்கு நீ எனக்கு தெய்வம் போல உன்ன சாவர வரைக்கும் மறக்கமாட்டேன்னு புலம்பி வச்சிருந்தான். போனவன் சும்மா போகல வயத்துல ஒண்ண குடுத்துட்டு போய்ட்டான்.வேற என்ன பண்ண முடியும் மீண்டும் தொழில்ல மும்முறமா இறங்கினேன்.ஆனா குட்டி போட்ட ஜீவனுக்கு இந்த தொழில்ல மார்க்கெட் உடனே போய்டும்.அது சரி இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு.
சரிப்பா நீங்க எங்க இறங்கனும்?

என்ன மச்சி ஏதாவது பிட்ட போட்டு உஷார் பண்ணலாம்னு பார்த்தா நீ வேலைக்கி ஆக மாட்ட போல?

என்னப்பா ஏதோ குசு குசுன்னு சொன்னா நானும் கேட்பேன்ல?.

நாங்க கோயம்பேடு வரை போறோம்.உங்க குழந்தை என்ன ஆச்சு? விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லனா விட்டுருங்க.

கண்டிப்பா சொல்றென் உங்கள பார்த்ததும் எனக்கு அவன் நியாபகம்தான் வந்தது அதனால தானே இவ்ளோ நேரம் பேசிக்கிட்டே வந்தேன்.தொழில விட்டுட்ட வயசான அம்மா ஒருத்தங்க துணையோடு அவன வளர்த்தேன்.ஆரம்பத்துல தாலி கட்டாத மனைவியா பல பேர் என்ன ஏத்துகிட்டாங்க ஆனா என் மகன விட்டுட்டு வர சொன்னாங்க.வாழ்க்கையே அவனுக்குத்தான்னு ஆன பிறகு விட்டுட்டு போற எண்ணமெல்லாம் ஓடி போயிடுச்சி.வருவது அஞ்சோ பத்தோ அத வச்சி வாழ்கைய ஓட்ட முடிவு செஞ்சேன்.

 அது சரி உங்க மகன் இப்ப உங்க கூட இல்லையா?

இல்லப்பா படிச்சி ஒரு லெவலுக்கு வந்த பிறகு நல்ல வேலைக்கு போனான்.சரி இத்தோடு நம்ம கஷ்டம் ஒழிஞ்சதுன்னு நினைத்தேன்.ஒரு நாள் அவன்
அம்மா பொண்ணு வீட்டுல நம்ம பேக்கிரவுண்ட் தெரிஞ்சிடுச்சி அவங்க என்ன தனி குடித்தனம் போனா மட்டுமே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க நானும் எங்க அம்மா என் பேச்ச தட்டமாட்டாங்கன்னு சொல்லிட்டேன்.
உன்ன வாரத்துக்கு ஒரு முறை வந்து பார்க்கறேன்,பணம் ஏதாவது தேவை பட்டா என் நம்பருக்கு கூப்பிடுமா என்று சொல்லி போனவன் தான் 3 வருஷமாகுது வரவே இல்ல ஏதோ மும்பை பக்கம் போனான்னு கேள்வி பட்டேன்.
அப்புறம் என்னப்பா பண்றது வயிறு இருக்குல்ல திரும்பவும் தொழில்தான் என்ன காப்பாத்துது ஓண்ணு மட்டும் சொல்றேன் கண்ணுகளா பெத்த தாய் வயிறு பத்தி எரிஞ்சா எதுவுமே தாங்காது.நான் வேணும்னா முற தவறி பெத்திருக்கலாம் ஆனா முற தவறி வளர்க்கல அப்பா நம்ம கஷ்டம் முடிஞ்சதுன்னு நினைச்சேன் ஆன மீண்டும் தொடருது.
இப்ப கூட உங்க அம்மா அப்பா உங்கள எதிர்பார்த்து கொண்டு இருக்கலாம்.பாதி வழில எறங்கி எங்கேயாவது ரூம் போட்டு நாம ஜாலியாக இருக்கலாம்.அதனால என்ன பயன் எனக்கு எனக்கு தேவயான காச சம்பாதிச்சாச்சு.பாவம் உங்க அம்மா அப்பாவுக்கு போக வேண்டிய காச கொண்டு போக எனக்கு மனசு இல்ல,இருக்கிற காச கொண்டு போயி அவங்க கிட்ட கொடுங்கப்பா ரொம்ப சந்தோஷ படுவாங்க.

சரிம்மா இந்த நூறு ரூபாயாவது வச்சிக்க

தம்பி எனக்கு பிச்சை எடுக்குற பழக்கம் இல்லப்பா.இந்த பணத்த வச்சி ஏதாவது பொருள வாங்கி உன் பெற்றோரை சந்தோஷ படுத்து.

அது வரை மோக பொருள் மட்டுமே என்று நினைத்த நானும் என் நண்பனும் அருமையான தாய் இதயம் ஒன்று எங்கள் அருகில் பேசிக்கொண்டு இருக்கிறது என்பதை வெகு நேரம் கழித்தே அறிந்துக்கொண்டோம்.


No comments:

Post a Comment